27. நாண்.
Author
: கோவை கவி
Blog
: வேதாவின் வலை..
Date
: 23-05-2013 19:53:56
'நாண். (2004ல் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எழுதி வழமையான வானொலியில் நான் வாசித்த கவிதையிது. ” நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்” பாடலின் தாக்கம். பிடித்த பாடலும் கூட) நல்ல தமிழ் நல்ல இலக்கணம் நல்ல அறிவு நல்ல அனுபவம் நல்ல தகுதி நல்ல ஆய்வு நனைத்து நடும் நற்றமிழ் நடவு! நல்ல கவிதை விளைச்சல் கனவு! நல்ல நம்பிக்கை உயர்த்தும் தரவு! நற்றமிழ் நடவு கிறுக்கல் அல்ல! […]'
Read full article
கலையும் கற்பனையும் 8.(கைவினை)
Author
: கோவை கவி
Blog
: வேதாவின் வலை..
Date
: 20-05-2013 20:44:19
'கலையும் கற்பனையும் 8.(கைவினை) சிறுவர்களிற்கு பொத்தான் என்றால் நன்கு பிடிக்கும். சட்டையிலிருந்து களன்றவைகளை சிலர் சேகரித்து வைத்து விளையாடுவார்கள். ஒரு தகர டப்பாவிலோ அல்லது போத்தலிலோ போட்டு வைத்து பாவிக்கலாம். இப்படி சேர்த்தவைகளைப் பிள்ளைகளோடு பல வகையில் விளையாடலாம். லூடோ போன்ற விளையாட்டிற்குக் காய்களாகவும் பாவிக்கலாம். நானும் இப்படி வகை வகையான அழகான பொத்தான்களை சேகரித்து வைத்திருந்தது நினைவு வருகிறது. இங்கு நீங்கள் காண்பது நிறமூட்டிய சாக்குத் துணியில் பொத்தான்களை மரம் போன்ற அமைப்(...)'
Read full article
38. பரிணாம மந்திரம்.
Author
: கோவை கவி
Blog
: வேதாவின் வலை..
Date
: 17-05-2013 21:03:53
'பரிணாம மந்திரம். உருகி ஓடும் பனியாறாய் பெருகும் அன்பு பேராறாய் தரும் நேசம் அமைதியானது. பெரும் ஆதரவான கைப்பிடியது. கருவோடு திருவான பெருமையது. பருகிடும் பெற்றவர் பாசமது குருவானது. நாம் பெரும் தருவாக இருவரும் ஒருமையாய்த் தருவது, கருவறை தொடங்கிக் கல்லறையீறாக சில்லறையின்றிப் பெறும் தூயது. நல்லறமாகவிது வாய்த்திட்டால் வாழ்வு பல்லறமுடையவொரு பரிணாமமாகும். பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க். […]'
Read full article
276. தனிமை.
Author
: கோவை கவி
Blog
: வேதாவின் வலை..
Date
: 15-05-2013 06:41:45
'தனிமை. ” தனிமையை ரசி!” என்று ஒரு கவிதையை இதற்கு முன்னர் எழுதிவிட்டு இது என்ன மறுபடியும் என்று எண்ணுவது இயல்பு. சமீபத்தில் எழுதியது – தனிமையை ரசி. தனிமையை நான் ரசிப்பதுண்டு. இதே நேரம் கூட்டுறவும் பிடிக்கும். இப்போது தருவது 2004ல் யான் எழுதி ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் வாசித்தது. பின்னர் 2005ல் (ஐப்பசி, கார்த்திகை, மார்கழி) யேர்மனிய கலைவிளக்கு சஞ்சிகை பிரசுரித்தது. 2006ல் சி.ஐ.ரிவியில் நான் தொலைபேசி மூலம் வாசித்தது. சில […]'
Read full article
275. தனிமையை ரசி!
Author
: கோவை கவி
Blog
: வேதாவின் வலை..
Date
: 12-05-2013 07:45:31
'தனிமையை ரசி! தனிமையே தத்துவமாகு தகவோடு! தனிமையே தத்தளிக்காது தாண்டு! இனிமையே தருக்கோடு கலந்தாடு தனிமையோடிணைந்து இசைந்தாடு! (தனிமை) சீரில்லா உறவுக் கூடு சீற்றத்தின் வெற்றுக் கோடு தீராத வெறுமைக் காடு தீமூட்டும் தனிமைக் கோடு. (தனிமை) ஓற்றைப் பெற்றோருக்கும் தனிமை. இரண்டகப் பெற்றோருக்கும் வெறுமை. திரண்ட ஏமாற்றத்தால் வெம்மை. மிரண்டெரியூட்டும் கசப்புக் காடு (தனிமை) சுக்கு நூறாகும் மனம் பாளமாகும் இக்கட்டில் நொறுங்கிக் காயமாகும் திக்க(...)'
Read full article
274. பனிப்போர்.
Author
: கோவை கவி
Blog
: வேதாவின் வலை..
Date
: 08-05-2013 21:46:28
'பனிப்போர். எப்போதுமெங்குமொரு பனிப்போர். தப்பாகவோ சரியாகவோவொரு தனிப்போர். அப்புமியலாமையிற் சுரக்கும் கசப்பு நீர். உப்பும் போட்டியுணர்வின் பொறாமை நீர் மூப்பு வகிக்கும் மூலவழியாலெழும் பனிப்போர். ஆப்புவைக்கும் ஆக்கச் சக்திக்காகத போர். சப்பென வாழ்வுச் சந்தோசம் கருக்கும் போர். காப்பில்லா மனிதநேயப் பிணிப்போர். பார்க்கும் தொலைக் காட்சிகள் பாதமூன்றப் பனிப்போர். பரிமாறும் வானொலிகளின் வார்த்தைப் பனிப்போர். பாடகர்களி(...)'
Read full article
52. கவிதை பாருங்கள்(photo,poem)
Author
: கோவை கவி
Blog
: வேதாவின் வலை..
Date
: 04-05-2013 20:53:41
'உரவு மொழியானாலும் கவியிலே தரவு கருத்தாக அமைகவே. மரபுக் கவிதை வரைந்தாலோ பிரபு கவியில் நீயென்பார்.'
Read full article
273.
Author
: கோவை கவி
Blog
: வேதாவின் வலை..
Date
: 01-05-2013 19:41:34
'அறுபடும் வேரும் அன்னியமாகும் உறவும். நீர் ஊற்றி நிலம் நெகிழ வைத்தல், வேர் அறுபடாது வெளியே மரமிழுத்தல் வேளாண்மை வழியொரு எளிமை வழி. வேதனையின்றி உறவு வேர் அறுபடாத வழி. ஆதரவை அழுக்கின்றிப் பூரணமாய்க் கொடுத்திட்டால், ஆனந்தமாய் அன்பை அள்ளி வழங்கிட்டால், ஆட்கொள்ளும் அமைதி அன்னியமாகாது ஆணித்தரமாயுறவு வேர் அறுபடாது. அலட்சியக் காற்றின் அவலட்சண அலை அன்பெனும் வேரை அறுபட வைக்கும். அகங்காரப் பட்டாடை தரித்து அலங்கோலமாய் அன்னியமாக்கும் நல்லுறவு நிலையை. [...]'
Read full article
51. கவிதை பாருங்கள்(photo,poem)
Author
: கோவை கவி
Blog
: வேதாவின் வலை..
Date
: 28-04-2013 07:21:27
'வாக்காள் அருள் வாக்கியம் பேசல். மாக்கள் பெறாப் பாக்கியம் வாக்குத் தவறாதே! காக்கும் ஆறறிவு ஊக்கமுடை உயர்வு மக்கள் நாம் மாக்களல்ல! மாக்களை வதைக்காதே! பூமாலை போலொரு பாமாலையாக்கப் பெரும் பாடடைகிறான் பாவாணன். பாவை மதித்திடு! 28-4-2013.'
Read full article
கலையும் கற்பனையும் (கைவினை). 7
Author
: கோவை கவி
Blog
: வேதாவின் வலை..
Date
: 26-04-2013 07:35:15
'கலையும் கற்பனையும் (கைவினை). 7 சிறு வயதில் ஊரில் களி மண்ணில் உருவங்கள் செய்து விளையாடினோம். இவற்றில் முக்கியமாகப் பிள்ளையார் பிடித்தும் விளையாடியது நினைவு வருகிறது. இது போல இங்கு பாலர் நிலையத்தில் கடையில் வாங்கிய நிறமூட்டிய களிகளில் உரு அமைப்ப்பது மிகப் பிரபலம். இதில் இரண்டு வகைகள் உண்டு. டெனிஸ் மொழியில் எல்இஆர் என்று ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டும் ”லிய” என்போம். அல்லது ”மொடலிய வொக்ஸ்” என்போம். ஒரு வகை எந்த நாளும் இடிபாப்பம் செய்யும் [...]'
Read full article
50. கம்பன் ஏமாந்தான்!…
Author
: கோவை கவி
Blog
: வேதாவின் வலை..
Date
: 22-04-2013 20:45:09
'கம்பன் ஏமாந்தான்!… கும்பன் இலக்கண வரிகள் உம்பல் தமிழ் வரிகள் உம்பர் தரும் வரிகள். சம்பகம் நிறை வரிகள் கம்பனும் ரசித்த வரிகள். கம்பளிப் பூச்சி ஊரலாக அம்பலத்தில் வந்து ஆடும் கொம்பனல்லாதவன் வரிகளென்ற வெம்பல் வரிகள் கண்டால் கம்பன் கடிதாய் ஏமாறுவான்! (கும்பன் -அகத்தியன். உம்பல் – வலிமை. உம்பர் – உயர்ச்சி சம்பகம் – தற்பெருமை. கொம்பனல்லாதவன் – ஆற்றலற்றவன். வெம்பல் [...]'
Read full article
8. வெற்றிக்கு ஒரு வயது
Author
: கோவை கவி
Blog
: வேதாவின் வலை..
Date
: 16-04-2013 20:59:59
'வெற்றிக்கு ஒரு வயது எங்கள் செல்லப் பேரன் தங்கக்கட்டி ராசன் உங்கு குடித்து வளர்ந்தான். இங்கு ஒரு வயதாகிறான். திலீபன் – சாந்தியின் அரும் திலகம் தினகரன் ”வெற்றி” உலவி நிநைகிறார் இன்று கலகலப்பு ஒரு ஆண்டு. எட்டியடி வைக்கிறார் சுட்டிச் செல்வன் எங்கள் கட்டி வராகன் வெற்றியே பட்டுக் குஞ்சப் பெட்டகமே! அச்சுப் பிச்சு மழலையால் கிச்சுக் கிச்சு மூட்டுகிறார் பச்சை மரகதமே! பல்லாண்டு சீரும் சிறப்பாக வாழ்ந்திடு! [...]'
Read full article
272. புகையால்….
Author
: கோவை கவி
Blog
: வேதாவின் வலை..
Date
: 15-04-2013 20:33:25
'புகையால்…. பெருவாரியாக மக்கள் கூடும் பேருந்து நிலையம் தெருவெங்கும் வருந்தாது புகைக்கிறார்கள் பிறர் வருத்தம் அறியாது மடைமையாய். பாதையில் நடக்கும் போதும் கீதையெனக் கையில் கொண்டு வாதையெனும் புகையோடு பலரும் பூதையாய் இதயத்தைத் தாக்குகிறாரே! அங்கும் இங்கும் எங்கும் தங்கும் புகை! புகை! கிங்கரன் இயமன் போல் வாங்குதே வதைக்குதே உயிரை. அருமையாம் நிம்மதி குலைகிறது. கருமைப் புகையால் பதைப்பு. திருமை மனம் திகைக்கிறது. தெருவிலும் எங்கும் அனுபவம் கொடுமை. [...]'
Read full article
271. நேர்த்தியாய் மலர்க!
Author
: கோவை கவி
Blog
: வேதாவின் வலை..
Date
: 13-04-2013 20:22:01
'நேர்த்தியாய் மலர்க! நேர்த்தியாய் மலர்க புத்தாண்டு! சேர்த்திடு சுகங்கள் நீண்டு! போர்த்திடு மகிழ்வு ஈண்டு! கீர்த்தி பெருகச் சீண்டு! பொங்குது மனம் எதிர்பார்ப்பாய்! ஏங்குது மனம் புதுக்கனவாய்! இங்கும் புத்தெழில்; நினைவாய் சங்கொலி முழங்கிட வருவாய்! பந்த பாசம் இணைந்திட வெந்த மனங்கள் ஆறிட நந்தவனமாய் மகிழ்ந்திட வந்திடு 2013ம் ஆண்டே! நேற்றைய ஆண்டு நம்மில் ஏற்றிய சுமைகள் மீண்டு வெற்றிகரமாய் தாண்ட வெற்றி ஆண்டாய் வருவாய்! நிர்க்கதியானவர் வாழ்வுயர்ந்திட சர்க்கரையாக அமைதி கலக்கட்டும். அர்த்தமுடை ப(...)'
Read full article
49. கவிதை பாருங்கள்(photo,poem)
Author
: கோவை கவி
Blog
: வேதாவின் வலை..
Date
: 10-04-2013 20:25:31
'சிரிப்பெனும்…. சிரிப்பென்ற அமுத சுரபி விரித்துக் குலுங்கும் மகிழ்வு பரப்பி. எரிக்கும் கவலையை இன்பம் நிரப்பி வரிசையிடும் நோயிலிருந்தோடலாம் தப்பி. எழில் மலர் மலர்ந்து சிரித்து வழிய வழிய இன்பம் தெளிக்கிறது. அழிவில்லாத் திறமையாளன் மனிதனேன் அழிபடர் சூழ்ந்ததாய் உம்மென்றிருக்கிறான்! (அழிபடர் – மிகுந்த துன்பம்.) பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க். 10-4-2013.'
Read full article
270. சென்று நாளை வா!
Author
: கோவை கவி
Blog
: வேதாவின் வலை..
Date
: 07-04-2013 20:13:18
'சென்று நாளை வா! அன்னமே நீரில் தோரணமே! உன் பிரசன்னக் காரணம் முன்னைத் தூதெனும் ஆரணமோ! பின்னோக்கம் சங்ககாலப் புராணம். நீள் விசும்பு பிரதிபலிக்கும் நீருள் நீந்தும் சோடியே! நீராடுகிறோம் வாழ்விலுன்னைப் போல் நீளட்டுமெம்மின்பமும் நிலைக்க! தோதுடன் அன்பன் அருகிருக்க தூது எனக்கேன் அன்னமே! சாதுரிய மனித குணத்திற்கு சாகித்தியத்தில் பேர் கொண்டாயே! நிறைகுடமாமெனன்பன் வரும் வரை நின்றிடுவாய்! நின்றிடுவாய்! பின் சென்று நாளை வா! நன்று நிலவரம் பேசுவோம்! [...]'
Read full article
269. இதுவன்றோ வேண்டும்!
Author
: கோவை கவி
Blog
: வேதாவின் வலை..
Date
: 05-04-2013 21:35:04
'இதுவன்றோ வேண்டும்! குவிந்த கருத்து கூடும் சந்தம் கவித்துவம் மேவிய கட்டான சொற்கள் கவியாக்க வேண்டும் வேறென்ன வேண்டும் செவிகள் குளிர இதுவன்றோ வேண்டும். (மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்) மதுகை வரிகள் மதுரமாய் விழுந்து எதுகை மோனை அதுவாயிணைந்து புதுமை பண்டித பவனியாய் தவழ்ந்து பதுமமாய் விரியலாம் வரிகள் பிறந்து. (மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்) ஒதுக்கும் பிதற்றல் கட்டுரைப் பாணியால் சதுப்பு நிலமாம் [...]'
Read full article
48. கவிதை பாருங்கள்(photo,poem)
Author
: கோவை கவி
Blog
: வேதாவின் வலை..
Date
: 30-03-2013 21:21:49
'எது அழகு! கவியழகா! மொழியழகா! குவியுமுன் திமிரழகா! கவினுறு மொழி கைவந்ததென்றால் தெவிட்டும் அகமதி குவிந்திடுமோ! சீண்டும் அதை ஓட்டு! தேண்டித் தூர விரட்டு! பாண்டல் உய்ய விடாது! தாண்டு தூரத் தாண்டு! அகம்பாவம் தொடும் கட்டம் அருட் கயிறை வெட்டும். அமைதித் தூக்கம் அறுக்கும். அமைதிப் பாதை சிறப்பாம். (அகமதி – அகந்தை , ஆணவம், இறுமாப்பு.) பா ஆக்கம் பா வானதி வேதா. [...]'
Read full article
268. உனக்கு நீயே நண்பன்
Author
: கோவை கவி
Blog
: வேதாவின் வலை..
Date
: 26-03-2013 21:36:03
'உனக்கு நீயே நண்பன் உடன் சேர்ந்துறவாடலும் உருகி அன்புதிர்த்தலும் உரிமையுதவி வரவாகும் உணர்வது கானல்நீராகும். உட்பற்றில்லா நேசம் உணராமை நிலையில் நிற்கும். உலகு உறவு மாயையாம் உணர்வின் உத்தரம் தெரியும். உதவி பெறுவார் உதறுவார் உதவாத பிறரையும் உயர்த்துவார். உன்னத மனிதராய் நடிப்பார். உத்தரீயமாக்குவார் பிறரை இவர். உதவும் உறவு உதறிடும் உதாசீனமிதயம் கிளறும். உடைந்தும் உயிர்க்கும் சக்தி உன்னத நம்பிக்கை ஊன்றுகோலில். உறைந்த மனதார் உறவு உறுதிப்பாடற்றதை உணர்ந்தால் [...]'
Read full article
47. கவிதை பாருங்கள்(photo,poem)
Author
: கோவை கவி
Blog
: வேதாவின் வலை..
Date
: 24-03-2013 09:49:47
'(வாழ்க்கையொரு சதுரங்கம் வாழ்ந்து பாரு சின்ன ரங்கம். வாழ்தல் தலைகீழானால் அசிங்கம் வாழ்ந்திட வேண்டும்ஆதங்கம். அன்பால் ஆடும் அரங்கம். துன்பங்கள் தட்டும் மிருதங்கம். வன்பு தட்டும் சலதரங்கம். உன் பங்கிலுயர்வதே இராசாங்கம்.)'
Read full article